Friday, 24 May 2019

மஹாமரியாதை -- ஜோதிட பாவ விளக்கம்

மஹாமரியாதை -- ஜோதிட பாவ விளக்கம்

முடக்கு என்கிற மஹாமரியாதை ராசி என்பது சூரியன் இருக்கும் ராசியில் இருந்து தனுசு வரை எண்ணி,

பிறகு தனுசுவில் இருந்து அதே எண்ணிக்கையை எண்ணவரும் ராசியாகும்.


ராசி மண்டலதில் மிதுனம் மற்றும் தனுசு ராசிகள்  தத்தமது ராசிகளில் தனித்துவமாகவும்,

மிதுனத்திற்கு அடுத்து, முன், பின் ராசிகளான கடகமும் ரிஷபமும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும்,

அதற்கு அடுத்த  முன், பின் ராசிகளான மேஷமும், சிம்மமும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும், 

அதற்கு அடுத்த  முன், பின் ராசிகளான மீனமும், கன்னியும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும்,

மேலும் அதற்கு அடுத்த  முன், பின் ராசிகளான கும்பமும், துலாமும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும்,

அதற்கு அடுத்த  முன், பின் ராசிகளான மகரமும், விருச்சிகமும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் அமைகிறது.

கொடுக்கப்பட்ட உதாரண ஜாதகத்தில் கன்னி சுயமரியாதை (Ego - Practical merits) ஸ்தானமாகவும், மீனம் மஹாமரியாதை (Super Ego - extraordinary merits) ஸ்தானமாகவும் இருக்கிறது.

கன்னி நல்ல கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற வருமானம் மற்றும் முக்கியத்துவத்தினை குறிக்கிறது.

இந்த பெண்மணி ஒரு வங்கியில் பெரிய அதிகாரியாக பணியாற்றுகிறார். அது அவருக்கு நிறைவான சுயமரியாதையை ஏற்படுத்துகிறது.

அதேநேரத்தில் மஹாமரியாதையினை தருகின்ற மீன ராசி வேலையில் நேர்த்தியையும் பிறருடைய வாழ்க்கையை எதிர்பாராத விதமாக முற்றிலும் மாற்றி அமைப்பதை குறிக்கிறது. 

இங்கே இந்த பெண்மணியின மூத்த சகோதரி
மறைவுக்குப் பிறகு அவருடைய குழந்தைகளை தன் குழந்தைகளாக பாவித்து சிறப்பான முறையில் படிக்கவைத்து அவர்களுக்கு இப்போது நல்ல வேலையையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

 இதன் மூலம் அவருடைய பரம்பரையிலேயே
நல்ல பெண்மணி என்ற பெயரை வாங்கியிருக்கிறார். 9ம் பாவத்தில் மஹாமரியாதை அமைந்ததினால் தர்ம சிந்தனையினால் மஹாமரியாதை பெற்றிருக்கிறார்.

No comments:

Post a Comment